சில நாட்களில் வெளியாகிறது வேட்புமனுக் கோரும் வர்த்தமானி!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி குறிப்பிட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்னும் சில தினங்களில் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட இருக்கின்றது. வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் அலுவலகங்களில் இடம்பெற இருக்கின்றது.
    
இதேவேளை, வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகளை கடந்த 23ஆம் திகதி கொழும்பில் இருக்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைத்து, இதுதொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டிருக்கின்றது.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி தினத்தில் தேர்தல் வாக்களிப்பு இடம்பெற இருக்கும் திகதி அறிவிக்கப்பட இருக்கின்றது. அதன் பிரகாரம், வாக்களிப்பு தினம் அடுத்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பத்தில் இடம்பெற பெரும்பாலும் இடமிருப்பதாக தேர்தல் அலுவலக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!