குடும்பத்தாருடன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ள கோட்டாபய..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இன்று துபாய் ஊடாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளனர். கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி அயோமா ராஜபக்ச, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ச, மருமகள் மற்றும் இரண்டு பேரப்பிள்ளைகளுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இவர்கள் எமிரேட்ஸ் விமான சேவையின் ஈ.கே.-649 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 2.55 அளவில் கட்டுநாயக்க விமானத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதி முக்கியஸ்தர்கள் வெளியேறும் முனையம் ஊடாக சென்று முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் விமானத்தில் ஏறியுள்ளனர்.

இவர்கள் முதலில் துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்க புறப்பட்டுச் செல்லவிருந்ததாக விமான நிலையத்தின் தகவல்கள் தெரிவித்தன.கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கவுக்கான நேரடி விமான சேவைகள் நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்தினர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி மனைவி அயோமா ராஜபக்ச, அவரது மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரே இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவர்கள் அனைவரும் அமெரிக்கா சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.  என்ற போதும் இந்த விடயம் தொடர்பில் கோட்டாபய தரப்பிலிருந்து எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!