தேர்தலில் நேரடியாக களம் இறங்கியுள்ள பசில்

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச உள்ளூராட்சி சபை தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாக களம் இறங்கியுள்ளார். அதனால் கட்சி என்ற ரீதியில் நாம் அமோக வெற்றி பெறவோம் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கொழும்பு மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை நேற்று கொழும்பு மாவட்ட பிரதேச செயலக காரியாலயத்தில் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!