டெல்லி சிறையில் கைதிகள் குளிக்க வெந்நீர்

டெல்லி கவர்னர் சக்சேனா சமீபத்தில் சிறைக்கைதிகளின் அடிப்படை மனிதத் தேவைகளை கருத்தில் கொண்டு, சிறைகளுக்கான 2 வார ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், சிறைக்கைதிகள் கடுங்குளிரால் அவதிப்படுவதாகவும், மேலும் வயதானவர்கள் மெத்தை இல்லாமல் துன்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து டெல்லியில் உள்ள 16 மத்திய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு குளிப்பதற்கும், சுகாதாரத்தேவைகளுக்கும் வெந்நீர் மற்றும் மெத்தை போன்ற வசதிகளை செய்து தர கவர்னர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!