சம்பளம், சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு திணறும் அரசு!

திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், சமுர்த்தி கொடுப்பனவை வழங்குவதில் இரண்டு வாரங்கள் தாமதம் ஏற்படலாம் எனவும் தெரிவித்தார். எவ்வாறாயினும், இதற்கு தீர்வாக, அனைத்து அமைச்சுக்களுக்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் பணத்தில் 5% குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!