கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு January 13, 2023 9:46 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது 2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றிய பணம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.ஜனாதிபதி மாளிகையில் போராட்டகாரர்கள் கைப்பற்றிய நிலையில், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கோடியே 70 லட்சம் ரூபா தொடர்பாகவே கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், பொலிஸ் விசேட குற்ற விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.ஜனாதிபதி மாளிகையில் இருந்த அந்த பணத்தை கைப்பற்றிய போராட்டகாரர்கள் அன்றைய தினமே அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர், ஜனாதிபதி மாளிகையில் கிடைத்த பணம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…