காலிமுகத்திடலில் இருந்து ஹிருணிக்கா பொது மக்களுக்கு விடுத்துள்ள அழைப்பு

இலங்கையின் சுதந்திர தின நிகழ்விற்காக கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தயார்ப்படுத்தல்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தலைவியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் பெருமளவு பணம் செலவழித்து மேற்கொள்ளப்படும் சுதந்திர தின நிகழ்வு தயார்ப்படுத்தல்களுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் அப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கூடாரங்களின் தூண்களில் கறுப்பு பட்டிகளையும் கட்டியுள்ளார்.

இதேவேளை பொது மக்கள் அங்கு வந்து கூடார தூண்களில் கறுப்பு பட்டிகளை கட்டி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு கோரியுள்ளார். மேலும் எதிர்வரும் 4ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள சுதந்திரதின நிகழ்வுகளை நடத்தவிட வேண்டாம் எனவும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!