கடன் வழங்குவதில் இலங்கைக்கு முன்னுரிமை – ஜப்பான் அறிவிப்பு

கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவுவதில், இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதி அமைச்சர் மசாடோ கனிடா தெரிவித்துள்ளார். ரோய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள விசேட செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது, நடுத்தர வருவாய் நாடுகளின் கடன் நெருக்கடிக்கு சர்வதேச தீர்வு இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அவ்வாறான நடவடிக்கைகளுக்காக ஜப்பான் பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை பேணுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!