கடன் நீடிப்பு – உறுதிப்படுத்தியது சீனா!

இலங்கைக்கான கடனை நீடித்துள்ளமையை சீனாவின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
    
இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சீனா உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை நீடிக்கப்பட்ட கடனைப் பெறுவதற்குத் தேவையான ஆதரவை இலங்கைக்கு வழங்குவதாகவும் சீனாவின் எக்ஸிம் வங்கி அண்மையில் கடிதம் ஒன்றை வெளியிட்டது.

இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிரமங்களை சீனா அறிந்துள்ளதாகவும், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா தன்னால் இயன்றளவு ஆதரவளிக்கும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!