மத்திய அரசின் தடையை மீறி பிரதமர் மோடி குறித்த ஆவண படத்தை வெளியிட்ட காங்கிரஸ்! January 27, 2023 9:51 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவண படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சி நேற்று பிபிசி ஆவண படத்தை திரையிட்டது. கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார்.இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி, 2 பாகங்களாக ஆவண படத்தை வெளியிட்டிருக்கிறது. ‘இந்தியா-மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிபிசியின் ஆவண படத்தை சமூக வலைதளங்கள், பொது இடங்களில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.இந்த சூழலில் காங்கிரஸ் சார்பில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பிபிசி ஆவண படம் நேற்று மாலை பொது அரங்கில் திரையிடப்பட்டது. கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி அரசு பதவி வகிப்பதால், ஆவண படம் திரையிடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அண்மையில் கூறும்போது, ‘பிரதமர் நரேந்திர மோடி மீதுவிமர்சனங்கள் இருந்தாலும் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் பிபிசி தலையிடக்கூடாது” என்று பகிரங்கமாக எதிர்ப்பை பதிவு செய்தார். காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்டித்து கட்சியின் அனைத்து பதவிகளையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…