எகிறியது பெற்றோல் விலை!

நேற்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் ஐ.ஓ.சி. அறிவித்துள்ளன. அதன்படி இதுவரை 370 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 400 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!