உயர்நீதிமன்ற நீதியரசராக கே.பி.பெனாண்டோ நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி கே.பி.பெனாண்டோ, உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.ரி.பி.தெஹிதெனியவின் ஓய்வையடுத்தே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கே.பி.பெனாண்டோ ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மேலும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி என்.பி.பீ.டி.எஸ் கருணாரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!