திருமணமான பெண்ணை கடத்தி விற்ற இன்ஸ்டா நண்பன்!

திருமணமான பெண்ணை ஒரு கும்பல் வேறு மாநிலத்திற்கு கடத்தி சென்ற விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் 23 வயது திருமணமான பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு திடீரென்று காணாமல் போனார். கணவர், குடும்பத்தினர், பெண்ணின் குடும்பத்தினர் எங்கு தேடியும் அப்பெண் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் அப்பெண் கடத்தப்பட்டது தெரியவந்தது.
    
ஆனால், இதற்கு அப்பெண்ணின் பழக்கமே காரணம் என்பதை போலீசார் தெரிந்துகொண்டனர். பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சில மாதங்களுக்கு முன்பு ஒருநபர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டு பேசத்தொடங்கினர். இவர் குடும்ப நிலையை கூறியுள்ளார். அப்போது, தனக்கு பெரிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பு உள்ளது, காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அந்த நபரின் பேச்சை நம்பி பெண்ணும் அதற்கு சம்மதம் தந்துள்ளார்.

வேலைத் தொடர்பாக நேரில் சந்தித்து பேச வேண்டும் எனக் கூறி பெண்ணை அந்த நபர் வீட்டை விட்டு வெளியே வர வழைத்துள்ளார். அப்போது அந்த பெண்ணை கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து ராஜஸ்தானுக்கு கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் பேரம் பேசி பெண்ணை விற்றுள்ளனர். அங்கு அந்த நபருடன் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். இவை அனைத்தும் அடுத்தடுத்து நடந்துள்ளதால் அப்பெண்ணால் தப்பமுடியவில்லை.

இதற்கிடையில் குடும்பத்தின் புகாரின் பேரில் காவல்துறை நடத்திய துரித விசாரணையின் பேரில் பெண் இருப்பிடம் தெரிந்து அவர் மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி மட்டும் பிடிபட்ட நிலையில், அவரின் கூட்டாளிகள் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருமணமான பெண்ணை ஒரு கும்பல் வேறு மாநிலத்திற்கு கடத்தி சென்ற விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!