கணினி கட்டமைப்பில் கோளாறு – கடவுச்சீட்டு விநியோகம் இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த திணைக்களம், அதனை சரிசெய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டைப் பெறுவதற்கு நேரத்தையும் திகதியையும் முன்பதிவு செய்துள்ளவர்களை சம்பந்தப்பட்ட திகதிக்கு மறுநாள் வந்து கடவுச்சீட்டைப் பெறுமாறு குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அலுவலகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, ஒருநாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு ஸ்பீட் போஸ்ட் ஊடாக கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!