தேர்தலை நடத்த போதியளவு பணமில்லை! அரசாங்கம் February 14, 2023 9:32 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு போதியளவு பணமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.தேர்தல் நடத்துவதற்கு போதியளவு பணம் உண்டா என தாம், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் கேட்டதாகவும், அதற்கு போதியளவு பணமில்லை என பதிலளித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலைமை குறித்து உயர் நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, நிதி இல்லாத காரணத்தினால் வேட்பு மனுக்களை அச்சிட முடியவில்லை என அரச அச்சகத் திணைக்களம் அறிவித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…