தமிழகத்தில் 10,000 பேரை ஏமாற்றி 800 கோடி ரூபாய் மோசடி செய்த 3 பெண்கள்!

தமிழக தலைநகர் சென்னையில் 10,000 பேரை ஏமாற்றி 800 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம் இயங்கி வந்தது. தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 15 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்றும், மாதந்தோறும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்தது.
    
அதனை நம்பிய பலரும் உடனடியாக முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இவ்வாறாக சுமார் 10,000 பேர் அந்த நிறுவனத்தில் பணத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூறியபடி வட்டியை கொடுத்ததாக அந்த நிறுவனம், அசல் தொகையையும் திருப்பி தரவில்லை.

இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர்களில் 1,500 பேர் பொலிஸில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், மூன்று பெண்களை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சுமார் 10,000 பேரிடம் 800 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!