இலங்கையில் மக்களுக்கு மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை

இலங்கையில் மக்களுக்கு மத்திய வங்கி அவசர எச்சரிக்கை அடங்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. அதன்படி மக்கள் தமது வங்கிக் கணக்கு மற்றும் வங்கி அட்டைகள் தொடர்பான விபரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பயனர் பெயர் (username), கடவுச்சொல் (password), பின் இலக்கம் (PIN), ஓடிபி இலக்கம் (OTP) மற்றும் வங்கி அட்டையின் சிவிவி இலக்கம் (CVV) என்பவை தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான இரகசிய தகவல்களை எவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!