முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் குடியுரிமை பறிப்பு – சிறைத்தண்டனையும் விதிப்பு.

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.
    
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸம்மிலுக்கு 42 இலட்சம் ரூபாவை வழங்கியமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை குற்றவாளியென தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் குடியுரிமையும் ஏழு ஆண்டுகளுக்குப் பறிக்கப்படும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!