உரும்பிராயை சேர்ந்த – இளைஞன் ஒருவர் வவுனியா விடுதியில் சடலமாக மீட்பு

வவுனியா மாவட்ட பொது வைத் தியசாலை சுற்றுவட்வீதிக்கு அருகே காணப்படும் விருந்தினர் விடுதியொன்றில் நேற்று மாலை 3.00 மணியளவில் இளைஞனொருவனின் சடல த்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகே காணப் படும் விருந்தினர் விடுதியொன்றில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியினை சேர்ந்த 30வயதுடைய அந்தோனி நிக்சன் என்ற இளைஞனின் சடலத்தினை பொலிஸார் மீட் டெடுத்துள்ளனர்.

இவரின் சடலத்திற்கு அருகே நஞ்சருந்தி தற்கொலை செய்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாகவும் மேலதிக விசாரணை களுக்காக சடலம் தற்போது வவுனியா மாவ ட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித் தனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணை களை வவுனியா தடயவியல் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!