பருத்தித்துறை – தொண்டை மானாறு வீதி காலை 6 மணியி லிருந்து ,ரவு 7 மணி வரையே பொதுமக்களுடைய பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என இராணுவம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இது தவிர வீதியின் அருகே வாகனங்களை நிறு த்தக் கூடாது எனவும் இராணுவம் உத்தர விட்டுள்ளது.
,தனை அடுத்து இந்த வீதியூடாக கடந்த பெப்ரவரி மாதம் 06ஆம் திகதியன்று அரச போக்குவரத்து சேவைகள் மாத்திரம் ஈடுபட இராணுவம் அனுமதி வழங்கியிருந்தது. மேலும் நேற்றைய தினம் பொதுமக்களுடைய போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என ,ராணுவம் அறிவித்திருந்த நிலையில், குறி த்த வீதியூடாக பயணிப்பதற்கு கட்டுப்பாடுகளை இராணுவம் விதித்துள்ளது.
இது தவிர குறி த்த பிரதான வீதியூடாக கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு வீதிகள் விடுவிக்கப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!