ஜனாதிபதியை படுகொலை செய்ய தீட்டப்பட்ட திட்டம்! சீ.ஐ.டி விசாரணைகள் ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் படுகொலை செய்வதற்கான முயற்சியொன்று குறித்து சீ.ஐ.டி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை படுகொலை செய்வது தொடர்பில் அரசியல் கட்சியொன்றின் முக்கியஸ்தர்கள் அண்மையில் வெளிநாடொன்றில் வைத்து கலந்துரையாடியுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியைப் படுகொலை செய்வதற்கான முயற்சிகள் குறித்து அவர்கள் கலந்துரையாடியுள்ளதாக பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் குறித்த அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பிலும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!