டொரன்டோவிற்கு விடுக்கப்பட்டுள்ள காலநிலை எச்சரிக்கை!

டொரன்டோவில் மற்றுமொரு பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதி நாட்களில் கடுமையான பனிப்புயல் நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
    
குறிப்பாக டொரன்டோ பெரும்பாக பகுதி தெற்கு ஒன்றாறையோ போன்ற பகுதிகளில் பனிப்புயல் நிலவும் என தெரிவிக்கப்படுகிறது. டொரட்டோவின் அனேக பகுதிகளில் 15 முதல் 20 சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தப் பகுதியில் அதிக அளவு பனிப்பொழிவு ஏற்படும் என்பது பற்றி துல்லியமாக இதுவரையில் தகவல்களை வெளியிட முடியவில்லை என கடலில் சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களாகவே டொரன்டோ பெரும்பாக பகுதி உள்ளிட்ட ஒன்றாறியோ மாகாணத்தின் சில பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் நிலைமைகளை அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!