ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட புதிய நியமனம்!

கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

1985 ஆம் ஆண்டு 07 இலக்கச் சட்டத்தின் திருத்தம் செய்யப்பட்ட 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 வது உறுப்புரைக்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  நியமிக்கப்பட்டுள்ளார். 

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஐந்தாண்டு பதவிக்காலத்தின் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைவான நியமனக்கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் பேராசிரியர் சுனில் ஆரியரத்னவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.        

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!