புத்தாண்டில் நடைமுறைக்கு வரும் விசேட நடவடிக்கை

புத்தாண்டு காலத்தில் மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் பொருட்டு நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.  இரத்தத்தில் உள்ள மதுவை கண்டறியும் வகையில் சாரதிகளிடம் சுவாசப் பரிசோதனை அலகுகள் நாடு  முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சுமார் 170,000 அலகுகள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 70,000 அலகுகள் பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை அடுத்த இரண்டு நாட்களுக்குள் அனுப்பப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!