மருத்துவ சேவை தொடர்பில் றொரன்டோ மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி!

றொரன்டோவில் சுமார் நான்கு லட்சம் மக்கள் மருத்துவர்களின் சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. ரொறன்ரோவில் குடும்ப மருத்துவர்களின் சேவையை பெற்றுக்கொள்ள முடியாத மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு உயர்வடைந்துள்ளது.
    
இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப் பகுதியில் றொரன்டோவைச் சேர்ந்த சுமார் நான்கு லட்சம் மக்கள் குடும்ப மருத்துவர்களின் சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரையில் குறைந்தபட்சம் 72000 பேர் குடும்ப மருத்துவர்களின் சேவையை இழந்துள்ளனர்.

சில இன சமூகங்கள் மற்றும் வருமானம் குறைந்தமக்கள் அதிகளவில் மருத்துவர்களின் சேவையை பெற்றுக்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு குடும்ப மருத்துவர்களின் சேவையை பெற முடியாத காரணத்தினால், வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நாட்களின் எண்ணிக்கை உயர்வடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!