யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் நான் தான்! – மோடி பெருமிதம். April 15, 2023 9:17 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் நான்தான் என இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இந்திய மத்திய இணை அமைச்சர் முருகனின் டெல்லி இல்லத்தில், இடம்பெற்ற தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். ‘இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த முதல் இந்தியப் பிரதமர் நான்தான். இலங்கையில் உள்ள தமிழர்கள் உதவிக்காகக் காத்திருந்தனர்.எங்கள் அரசாங்கம் அவர்களுக்காக ஏராளமான உதவிகளைச் செய்திருக்கிறது. நான் யாழ்ப்பாணம் சென்றபோது, அங்கு தமிழர்களுக்காக இந்திய அரசால் கட்டப்பட்ட வீடுகள் ஒப்படைக்கபட்டன. வீட்டில் நுழையும் முன்பு இடம்பெறும் பால் காய்ச்சும் பாரம்பரிய சடங்கில் நானும் கலந்துகொண்டேன். அதன் வீடியோக்கள் தமிழ்நாட்டில் வெளியானபோது தமிழ் மக்களிடமிருந்து நான் நிறைய அன்பைப் பெற்றேன் எனத் தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…