வடக்கு கிழக்கை வாட்டும் வெயில்!

நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில நாட்களில் சில பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக வெப்பமான காலநிலை நிலவும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
    
கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, குருநாகல், மன்னார், மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்றைய தினம் வெப்பச் சுட்டெண் குறிப்பிடத்தக்க அளவில் தொடரும் என வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.

எனினும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பொதுமக்கள் பகலில் வெளியில் நேரத்தை செலவிடும் போது அதிக தண்ணீர் மற்றும் அதிகப்படியான திரவங்களை அருந்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!