எந்த நாட்டுக்குள்ளும் வர முடியாத படி செய்து காட்டுவோம்! தமிழ் அரசியல்வாதிகளுக்கு புலம்பெயர் தமிழர் எச்சரிக்கை

இலங்கை அரசியலை நாம் அணு அணுவாக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு தான் இருக்கின்றோம் என உலக வாழ் புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதிநிதி நிமலன் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களின் வாக்குகளால் தான் இன்று நாடாளுமன்றத்தில் பிரதிநிதியாக இருக்கின்றீர்கள்.

ஆகவே நாடாளுமன்ற சட்டத்தின் படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களின் பிரச்சினைகளை சரியாக அணுகி தீர்வுத்திட்டங்களை வழங்காமல் வேறு எங்காவது பணப்பைகள் மற்றும் டீல் என சென்றால் எந்த நாட்டுக்குள்ளும் வர முடியாத படி நாம் செய்து காட்டுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இலங்கை அரசியலை நாம் அணு அணுவாக உண்ணிப்பாக அவதானித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். வாக்கு பெற்றுக் கொண்ட மக்களிடம் விஸ்வாசமாக நடந்து கொள்ளுமாறே நாம் சொல்கிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!