இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கண் சொட்டு மருந்து பயன்பாடு இடைநிறுத்தம்

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கண் சொட்டு மருந்து பயன்பாடு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு நாட்டின் அநேக வைத்தியசாலைகளில் இந்த சொட்டு மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நுவரெலியாவில் இந்த வகை மருந்தினை பயன்படுத்திய நோயாளி ஒருவருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்ட காரணத்தினால், மருந்து பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அரச மருந்தக கூட்டுத்தாபனத்தினால் இந்த வகை மருந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!