“வடக்கிலிருந்து இராணுவ முகாம் அகற்றப்படாது”

வடக்கில் காணப்படுகின்ற இராணுவ முகாம்களை ஒரு போதும் அகற்ற மாட்டோம். இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அம்பாந்தோட்டை துறைமுகம் எப்படி பல குறைப்பாடுகளை கொண்டு காணப்பட்டதோ அதேபோன்று தான் இன்று மத்தள விமான நிலையமும் முழுமையடையாத விமான நிலையமாக காணப்படுகின்றது.

பல பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட விமான நிலையம் இன்று எவ்வித பயனுமற்றதாக காணப்படுகின்றது. குறுகிய காலக்கட்டத்திற்குள் விமான நிலையத்தை முழுமையப்படுத்துவதே எமது நோக்கம்.

மேலும் தற்போது வடக்கில் காணப்படுகின்ற இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ஆனால் எக் காரணம் கொண்டும் வடக்கில் இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!