யாழ். நகரை அண்டிய பகுதிகளில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்! – தூக்கத்தைத் தொலைத்த மக்கள்

யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் நேற்றிரவு பல இடங்களில், வாள்வெட்டு குழுவினர் நடத்திய தாக்குதல்களால் பொதுமக்கள் தூக்கமின்றி இரவைக் கழிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனைக்கோட்டை, பொன்னையா வீதி மற்றும் புது வீதி, கொக்குவில்- பிரம்படி வீதி ஆகிய இடங்களில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகத்தை மூடியவாறு நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!