எமது உயிருக்கு ஆபத்து: விமல்!

“எமது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  விமல் வீரவன்ச  தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (21.04.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் மாறினாலும் கொள்கை மாறவில்லை. அதுதான் முக்கியம்.

ஜே.வி.பியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஓரிடத்தில் பேசுகின்றார், அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் கூற வேண்டும் என்று இன்னும் ஒரு இடத்தில் பேசுகின்றார், அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் போகக்கூடாது என்று. அவர்கள் ஓரிடத்தில் இருந்தாலும் கொள்கையில் நிலையாக இல்லை.

நாங்கள் இடம் மாறினாலும் கொள்கை மாறவில்லை. கொள்கைதான் முக்கியமே தவிர இடமல்ல. இது எமக்குச் சாதகமான கொள்கை அல்ல. இதனால் எதிரிகள் அதிகம் வளருவார்கள். எதிர்ப்புகள் கூடும். எமக்கு எதிரான தாக்குதல்கள் கூடும். மேலும், எமக்கு உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. நாட்டை நாசமாக்கிய மகிந்த தலைமையிலான அணியுடன் இணையமாட்டோம். அது ஒருபோதும் நடக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!