கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயப்பகுதியில் பலத்த பாதுகாப்பு! April 21, 2023 8:41 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதில் சர்வமத தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இணைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியின் இரு மருங்கிலும் பெருந்திரளான மக்கள் திரண்டுள்ளனர். கொச்சிக்கடை தேவாலய பகுதியில் இடம்பெற்று வரும் நினைவேந்தல் நிகழ்வுகளில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கலந்து கொண்டுள்ளார். இதில் கலந்து கொள்வதற்காக ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட மற்றும் காலிமுகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் அப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை தேவாலயப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…