ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்தை புறக்கணித்த முக்கியஸ்தர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களான மயந்த திஸாநாயக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிகழ்வு கொழும்பு ஏ.ஈ.குணசிங்க விளையாட்டரங்கில் நேற்று(01.05.2023) இடம்பெற்றுள்ளது.

இந்நிலயில் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான தரப்புகள் தெரிவித்துள்ளன.
எனினும், ராஜித சேனாரத்ன சமூகம் தராமைக்கான காரணம் வெளியாகவில்லை.

மேற்படி இரண்டு எம்.பிக்கள் உள்ளிட்ட ஒரு குழுவினர் ரணில் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என்று அண்மைக்காலமாக செய்திகள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!