வடக்கில் புலிகளின் கை ஓங்குகிறதாம்! – ரோஹித அபே­கு­ண­வர்­தன கூறுகிறார்

யாழ். கோட்டைப் பிர­தே­சத்­திற்குள் இரா­ணு­வத்­தினர் நுழை­வ­தற்கு தடை­வி­திக்கும் தீர்மானம் யாழ்.மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அவ்வி­வ­காரம் தொடர்பில் வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் மற்றும் மாகாண சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் ஆகி­யோ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிர்­க்கட்­சியில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோஹித அபே­கு­ண­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

‘நல்­லாட்சி அர­சாங்கம் விடு­தலைப் புலிகள் அமைப்பு ஏற்­ப­டுத்­திய பாதிப்பை விட பயங்­க­ர­மான பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. விடு­தலைப் புலிகள் அமைப்பு கட்­டு­நா­யக்க விமான நிலையம் மீது தாக்­குதல் நடத்­தி­யது. எனினும் அதனை மீள்­நிர்­மா­ணிக்க முடிந்­த­துடன் வழமை நிலைக்கு கொண்டு வர­மு­டிந்­தது. இருந்த போதிலும் மத்­தள விமான நிலை­யத்­திற்கு நல்­லாட்சி அர­சாங்கம் ஏற்­ப­டுத்­தி­யுள்ள பாதிப்­பி­லி­ருந்து மீண்­டெ­ழு­வது கடினம்

மத்­திய வங்கி மீதும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு தாக்­குதல் நடத்­தி­யது. அவ்­வ­மைப்பு கட்­டி­டத்தின் மீதே தாக்­குதல் நடத்­தி­யது. அங்­குள்ள பணத்தைக் கொண்டு செல்­ல­வில்லை. எனினும் நல்­லாட்சி அர­சாங்கம் மத்­திய வங்கி கட்­டி­டத்தின் மீது கைவைக்­காது அங்­குள்ள பணத்தை திருடிச் சென்­றுள்­ளது.எனவே விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு 30 வருட காலத்தில் ஏற்­ப­டுத்­திய பாதிப்­பை­விட நல்­லாட்சி அர­சாங்கம் கடந்த மூன்றரை வரு­டங்­களில் அதி­க­ள­வான பாதிப்­பு­களை நாட்­டுக்கு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

தற்­போது யாழ்ப்­பாணம் கோட்டைப் பிர­தே­சத்­திற்குள் நுழை­வ­தற்கு இரா­ணு­வத்­தி­ன­ருக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக்கூட்­டத்தின் போது அது குறித்த யோசனை ஒன்றை நிறை­வேற்­றி­யுள்­ளனர். அவ்­வா­றெனின் யாழ்ப்­பாணம் கோட்டை இந்­தி­யா­விற்குச் சொந்­த­மா­னதா? அல்­லது தமிழ் ஈழத்­திற்­கு­ரி­யதா?

அவ்­வி­வ­காரம் தொடர்பில் வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் மற்றும் மாகாண சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் ஆகி­யோ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் வடக்கில் தற்­போது விடு­தலைப் புலிகள் அமைப்பின் கை ஓங்கி வரு­வ­தனை அவ­தா­னிக்க முடி­கி­றது. மேலும் யாழ்ப்­பாணம் கோட்­டைக்குள் இரா­ணு­வத்­தி­னரால் செல்ல முடி­யுமா இல்லை என்­பது குறித்து இரா­ணுவத் தள­பதி பதி­ல­ளிக்க வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!