லண்டனில் வளர்ப்பு நாயால் பெண்ணுக்கு நேர்ந்த கதி! May 19, 2023 10:43 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest லண்டனின் குரோய்டன் பகுதி பெண்மணி ஒருவர் கூட்டமாக நாய்கள் தாக்கியதில் மரணமடைந்த நிலையில், அவரது வளர்ப்பு நாயும் அவரது மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. குரோய்டன் பகுதியை சேர்ந்த 28 வயது பெண்மணி நடாஷா ஜான்ஸ்டன் என்பவர் ஜனவரி 12ம் திகதி நடந்து சென்றுகொண்டிருக்கும் போது 8 நாய்களால் தாக்கப்பட்டு பரிதாபமாக மரணமடைந்தார். இந்த வழக்கின் விசாரணையில், கூட்டமாக 8 நாய்கள் கொடூரமாக தாக்கியதில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாய்கள் ஓநாய்களின் கூட்டமாக மாறி தாக்கியது எனவும், எட்டு விலங்குகளும் பின்னர் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சர்ரே காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், தண்டிக்கப்பட்ட ஒரே விலங்கு ஜான்ஸ்டனுக்கு சொந்தமானது என்றார். அத்துடன் தாக்குதலில் ஈடுபட்ட 8 நாய்களில் இரண்டை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும், ஐந்து நாய்கள் தனியார் விலங்கு காப்பகங்களில் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், ஜான்ஸ்டனுக்கு சொந்தமான நாயை நித்திரையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…