கனேடியப் பிரதமருக்கு அலி சப்ரி கண்டனம்!

தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் தினத்தை அங்கீகரிக்கும் விதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ள கருத்துக்களை இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கண்டித்துள்ளார்.
    
‘இன்று நாங்கள் 14 வருடங்களுக்கு பின்னர் துன்பகரமாக நிகழ்ந்த உயிரிழப்புகளை நினைவுகூருகின்றோம்.முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்கள் பறிபோயின, பலர் காணாமல்போனார்கள், காயமடைந்தார்கள், இடம்பெயர்ந்தார்கள். கொல்லப்பட்டவர்கள், உயிர்பிழைத்தவர்கள், அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட துயரத்துடன் தொடர்ந்தும் வாழும் அவர்களின் குடும்பத்தவர்கள் குறித்து எங்கள் சிந்தனைகள் உள்ளன.

கடந்த வருடம் மே18ம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவுதினமாக நாங்கள் அங்கீகரித்தோம் , மோதலால் கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் உரிமைக்காகவும் இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளவர்களுக்காகவும் குரல்கொடுப்பதை கனடா நிறுத்தாது’ எனவும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த அறிக்கையை கண்டித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், இது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகளுக்கு உதவியாக அமையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!