மன்னிப்புக் கோரினார் போதகர் ஜெரோம்!

தனது வார்த்தைகள் எந்த வகையிலும் தங்கள் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அனைத்து பௌத்த பிக்குகள், பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ ஒரு நேரடி நிகழ்ச்சியில் வீடியோவினூடாக கூறினார்.
  
“நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும், எனது வார்த்தைகள் உங்களை எந்த வகையிலும் மனரீதியாக புண்படுத்தியிருந்தால், எனது பௌத்த சகோதரர்கள், இந்து சகோதரர்கள், முஸ்லீம் சகோதர சகோதரிகள் ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்,” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!