தென்னிலங்கையில் தீர்மானிமிக்க வாரம் – நாடு திரும்பிய பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.
கடந்த மே மாதம் 7ஆம் திகதி பசில், டுபாய் சென்ற நிலையில் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

அவர் கடந்த வெள்ளிக்கிழமை நாடு திரும்பியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கான முக்கிய வாக்கெடுப்பும் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

அது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்பதற்கான வாக்கெடுப்பாகும். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!