ஜனகவை பதவி நீக்கும் பிரேரணை நிறைவேறியது! May 25, 2023 8:55 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பிரேரணையின் மீதான வாக்கெடுப்பில், அவரை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்து 123 வாக்குகளும் அதற்கெதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்கவை பதவி நீக்கும் பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான குற்றப்பத்திரிகையை தயார் செய்ததாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஜனவரி 29ஆம் திகதி முதலில் அறிவித்தார் அதனை எதிர்கொள்ள மிகவும் ஆவலாக உள்ளதாக ஆணைக்குழு தலைவர் அன்றே தெரிவித்திருந்தார்,இதேவேளை கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் கொள்ளுப்பிட்டி அலுவலகத்திற்கு சீல் வைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்தனர் மேலும் கடந்த மார்ச் 10 ஆம் திகதிஇ மின் கட்டணத்தை உயர்த்தும் மின்சார சபையின் முடிவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றில் ஜனக்க ரத்நாயக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இவ்வாறான சிக்கல்கள் எழுந்துள்ள நிலையிலேயே அவரை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…