ரணில் மட்டுமல்ல நம்மில் எவரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்! சம்பிக்க ரணவக்க காட்டம்

எதிர்வரும் 2048ஆம் ஆண்டு வரை திட்டங்களை வகுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறிய போதும், 2048ஆம் ஆண்டில் அவர் மட்டுமல்லாது தற்போது இருக்கும் நம்மில் எவரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதேவேளை நாட்டின் அபிவிருத்தி என்பது அடுத்த ஜென்மத்தில் புண்ணியம் கிடைக்க செய்வது போன்று செய்யும் காரியம் அல்ல, நாடு ஒன்றின் அபிவிருத்தி என்பது இப்படியான செயற்பாடு அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!