விரைவில் தேர்தல் – மொட்டு பிரமுகர்களிடம் ஜனாதிபதி சூசகம். June 1, 2023 8:24 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஜனாதிபதி தேர்தல் ஒன்றிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சூசகமாக தெரிவித்தார், எனினும் அவர் எந்த தேர்தல் என்பது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விசேட கலந்துரையாடல் ஒன்றிற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் தேர்தல் ஒன்று குறித்து கருத்து வெளியிடப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விரைவில் தேர்தலொன்று இடம்பெறும் என ரணில் விக்கிரமசிங்க சூசகமாக தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.ரணில் விக்கிரமசிங்க தேர்தல் குறித்து எதனையும் விசேடமாக தெரிவிக்கவில்லை. ஆனால் விரைவில் தேர்தலொன்று இடம்பெறலாம் என்பது அவரது பேச்சில் வெளிப்பட்டது என தெரிவித்துள்ள சாகர காரியவசம் அது உள்ளுராட்சி சபை தேர்தலா அல்லது ஜனாதிபதி தேர்தலா என்பது குறித்து தெளிவாக அறிந்து கொள்ளமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…