பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கஜேந்திரகுமாருக்கு அழைப்பாணை!

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் இன்று ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
    
நான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிப்பேன் என தெரிவித்துள்ளேன் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகரை தொடர்புகொள்ள முயன்றேன் தொடர்புகொள்ள முடியவில்லை. பிரதிசபாநாயகருக்கு இது குறித்து அறிவித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!