நீதிமன்றக் கட்டளைப்படி கொடியேறியது!

யாழ்ப்பாணம் வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலய கொடியேற்றம் நேற்று மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக நேற்றுக் காலை 10 மணியளவில் ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இந்தநிலையில் தடைப்பட்டிருந்தது. இந் நிலையில் இவ் வருட மகோற்சவத்தினை சிவதர்சக் குருக்கள் தலைமையில் நடத்துமாறு கடந்த 6ஆம் திகதி யாழ் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

எனினும் மகோற்சவ முன்னேற்பாட்டினை மேற்கொள்ள முயன்றபோது மற்றைய பூசகர் ஆலயத் திறப்பினை கையளிக்காததால் முரண்பாடு நிலவியது. யாழ்ப்பாணக் காவல்துறையினரால் குறித்த சம்பவம் தொடர்பில் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீண்ட நேர வாதப்பிரதிவாதங்களின் பின் ஆலய மகோற்சவத்தினை சிவதர்சக் கருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும், உற்சவத்தினை குழப்புபவர்களை கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் நீதிவானால் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.
இதனடிப்படையில் மாலை 5 மணிக்கு ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!