நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலை உடன் நடத்த சஜித் கட்சி வலிறுத்தல்

கடந்த வருடம் புரட்சியால் மக்கள் ஆணையை இழந்த நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 

ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 
மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் புரட்சி ஒன்று இடம்பெற்றது. அந்தப் புரட்சியின் விளைவாக ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விரட்டப்பட்டார். 

பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விரட்டப்பட்டார், நிதி அமைச்சர் பதவியிலிருந்து பசில் ராஜபக்ச விரட்டப்பட்டார், அமைச்சரவையும் விரட்டப்பட்டது, மொத்தமாக அரசே விரட்டப்பட்டது.
கோட்டாபய சட்டரீதியான ஜனாதிபதி அப்படி இருந்தும் அவருக்கான அங்கீகாரம் இல்லாமல் போனது.

நாடாளுமன்றத்துக்கும் இதேநிலை தான். இதனால் மக்கள் விரும்புகின்றவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு மக்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
அப்படிப்பட்ட நாடாளுமன்றத்தால் தான் நாட்டைச் சரியாக இட்டுச் செல்ல முடியும். இதனால் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் நிற்கின்றோம் என்றார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!