பௌத்தத்துக்கு எதிராக பேசுவோரின் வாயை மூட வேண்டும்!

பௌத்த மதத்தை விமர்சித்து வியாபாரம் செய்பவர்களின் வாயை அடைப்பதும், அந்த வியாபாரங்களுக்கு எவ்வாறு பணம் கிடைக்கிறது என்பதை ஆராய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
    
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சில அமைப்புகள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்ததாகவும், அதற்கு தான் இடமளிக்கவில்லை எனவும், அதனால் தாம் அடைந்த பின்விளைவுகள் குறித்து இறுதியில் பேசமாட்டேன் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“இன்று பௌத்தத்தின் முக்கியத்துவம் காலப்போக்கில் அதிகரித்துள்ளது. ஆனால் இன்று இந்நாட்டில் சில சக்திகள் புத்தபெருமானுக்கு அவமரியாதையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு அமைப்புகளை கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளதையிட்டு நாம் வருந்துகிறோம்.

பௌத்த தத்துவத்திற்கு மிகத் தவறான விளக்கங்களைக் கொடுத்து விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். புத்தபெருமானின் போதனைகளின்படி இது நமக்கு ஆச்சரியமல்ல. இப்படியான சவால்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பௌத்தத்திற்கு அவ்வப்போது வந்து கொண்டேயிருக்கின்றன.

இன்றைய ஏழ்மைக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் பௌத்தத்தில் விடை காணப்படுகின்றது. நான் அரசியல் பற்றி பேசவில்லை. பௌத்தத்திற்கு எதிராக பகுப்பாய்வுகளை மேற்கொண்டு வியாபாரம் செய்பவர்களின் வாயை அடைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அந்த வணிகங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது? பௌத்தத்தின் மீது கல்லெறிவது எப்படி? இவை சமீபத்திய சூழ்நிலைகள்.

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் சில அமைப்புகள் அதற்கான பணிகளுக்கு தயாராகின. அதற்கு நான் சிறிதும் அனுமதிக்கவில்லை. முடிவைப் பற்றி நான் இறுதியில் பேசப் போவதில்லை” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!