மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்லும் ஜனாதிபதி! வெளியான காரணம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி இலண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விஜயத்தின் போது பரிஸ் கிளப் உறுப்பினர்களை சந்திக்க ஜனாதிபதி ரணில் திட்டமிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் நெருக்கடிக்கான தீர்வு மற்றும் கடன் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிப்பதாக பரிஸ் கிளப் முன்னதாக அறிவித்திருந்தது. இந்த பயணத்தின் போது இலங்கையின் எதிர்கால கடன் மறுசீரமைப்பு பணிகள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!