தேசிய நெடுஞ்சாலையோரம் சடலமாக கிடந்த பாஜக தலைவி! June 13, 2023 9:27 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அசாம் மாநிலம் கோபால்புரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோலினி நாத். அவர் அம்மாவட்ட பாஜக செயலாளர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கோபால்புரா மாவட்டம் சல்பரா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஜோலினி நாத் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலையோரம் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த பென் பாஜக தலைவி ஜோலினி நாத் என்பது தெரியவந்தது. ஜோலினி நாத் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ஜோலினி நாத்தை படுகொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அசாமில் பாஜக தலைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…