ரணிலே வெளியேறு! – லண்டனில் கண்டனப் போராட்டம்!

லண்டனில் நேற்று பிற்பகலில் இடம்பெற்ற சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவை மையப்படுத்திய மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்ற நிலையில் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
    
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டம் குறித்த நிகழ்வு இடம்பெறும் இடத்துக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தின், போது ‘எமது தேசம் தமிழீழம் ரணிலே வெளியேறு” எனும் கோசங்களை எழுப்பி தமது எதிர்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!