கிராம சேவையாளர்கள் அனைவரும் யா்ழ். மாவட்டச் செயலகத்துக்கு அவசரமாக அழைப்பு!

யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள நிலைமைகள் சட்டவிரோத செயற்பாடுகள் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் 435 கிராம சேவையாளர்களும் அவசரமாக யாழ் மாவட்ட செயலகத்தில் ஒன்று கூடுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
    
இன்று 2 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும் கடற் தொழில் அமைச்சருமான டக்லஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கிராம சேவையாளர்களுடன் இடம் பெறவுள்ளதாக யாழ் மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!